Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, December 19, 2022

மறப்பது ஒரு வரம்

மறப்பது ஒரு வரம்

ஒரு பிரிவு தரும் நினைவு
அது தரும் வலி.
நான் 
என்ன வேண்டுமானாலும் 
தருவேன் அந்த வலியை மறக்க

ஒரு முறையேனும்
தங்கள் வலியை
வழியிலே விட்டுச் செல்லும்
ஆத்மாக்கள் பாக்கியவான்கள்.
.

விருப்பப்படி மறப்பதற்கான
ஒரு வரம்
நமக்கு அமைந்ததே இல்லை.
ஒரு பிரிவு தரும் நினைவு
அது தரும் வலி.
நான் 
என்ன வேண்டுமானாலும் 
தருவேன் அந்த வலியை மறக்க

மலைப்பயணங்கள்


காலத்தை முன்பின்
திருப்பிப் போடும்
நீண்டு நெளிந்த
ஊசிமுனை வளைவுகள்,

அடிமனதை கிளறிப்பார்க்கும்
அதலப்பாதாளங்கள்.

கொதித்தெழும் உணர்வுகளை
மட்டுப்படுத்தும்
பனிமூடிய பாதைகள்,

மலைப்பயணங்கள்
எப்போதும் மனதோடுதான்
பயணிக்கின்றன.

தேர்


ஊர் கூடி 

தேர் இழுக்க

குழந்தை 

வடம் பிடித்ததும்

நகரத் தொடங்கியது.



புலம் பெயர்ந்தவன்

புதுச்சுவை

பழக மறுக்கும் நாக்கு,


மொழி புரியாமல்

பதில் மறுக்கும் அதரம்.


பொருந்தா சீருடை

பொறுக்காத உடல்,


மழையின் மண்வாசனை

நுகர மறுக்கும் நாசி.


இருப்பின் இயலாமை

இறையும் இதயம்.


பிழைப்பு தேடி

புலம் பெயர்ந்தவனின்

உடல்மொழி ஒன்றும்

அவ்வளவு புதிரானதில்லை.

Friday, July 2, 2010

நீ,கவிதை ,காரணம்

எங்கேனும் ஒளிந்திருக்கும்

என்னோடு நீ இல்லாமல்போன காரணங்கள்.

அவை சொல்லும்

உன்னைப் பற்றிய கவிதைகளுக்கான அர்த்தங்களை....

Saturday, September 5, 2009

தேவதைகள்

தேவதைகள்
சொல்லிவைத்து வருவதில்லையென்றாலும்..
சட்டென வந்து நிற்பதும்,
வரங்கள் தந்து மகிழ்விப்பதும்
தற்செயலானதல்ல..

Saturday, July 18, 2009

நான்


நீ நீயாக இல்லாத
நாட்களில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..

Saturday, July 11, 2009

உன்..

உன் வெறுமை
ஏற்படுத்தும் கோபங்கள்
சற்றென கொல்லப்படுகின்றன.

சூழ்நிலைக் கூச்சல்கள்
குற்றமாய்த் தெரியவில்லை.

தனிமையின் அதிர்வுகள்
ஏனோ அந்நியப்படுத்துவதில்லை.

இன்னும் இருக்கின்றன
நீ விட்டுச்சென்ற
உன் நிமிடங்கள்.

Wednesday, July 8, 2009

உன் நினைவுகளற்ற....

உன் நினைவுகளற்ற இரவுகளையும்
நீ வந்து போகாத கனவுகளையும்
வெறிச்சோடிப்போன
அதிகாலை வானம்
நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது...

நேற்றிரவு...


நேற்றிரவு
நண்பனொருவன்
சொல்லிச்சென்றான்
நீ நல்லவனாக இருப்பதே
பெரும் பிரச்சனையென்று...

Tuesday, July 7, 2009

யாருமல்லாத யாரையோ..

யாருமல்லாத யாரையோ

நாம் எல்லோரும்

பிரதிபலித்து வாழ்ந்துவருவதாக

நேற்றைய கனவில்

நான் நானுமல்லாத

என்னிடம் சொன்னேன்.

பிரியமற்றே....



பிரியமற்றே இருந்திருக்கின்றன

உன் வீட்டு நாய்க்குட்டியும்

என் வீட்டு நாய்க்குட்டியும்

நாம் பிரியப்போவதறிந்து...

Saturday, July 4, 2009

இன்னுமொரு...


இன்னுமொரு
சாதாரண பொழுதென கழிகின்றன
உன் கணங்கள்.
நானோ
சலனமூட்டும் உன்னுடனான
சந்திப்புகளை தவிர்க்கும்
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன்.

Friday, July 3, 2009

பொதுவாக...

பொதுவாக
முகம் தெரியாத மனிதர்களே
நாம் போகவேண்டிய
இடத்திற்கான வழி சொல்கிறார்கள்.

வார்த்தைகளற்ற...

வார்த்தைகளற்ற உன் மௌனங்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன் காதலை..
ஓயாமல் பேசினாலும்
உணர்த்த முடிவதில்லை என்னால்...

Saturday, June 20, 2009

தமிழகமே!!

உன் நாட்குறிப்பேடுகளிலோ

உன்னை ஞாபகமூட்டும் சாதனங்களிலோ

குறிப்பேற்றிக் கொள்

'ஈழம்' என்ற வார்த்தையை..

சில நாட்களில் நீங்கள்

மறந்து விடக்கூடும்.

கூடவே பழக்கப்படுத்திக்கொள்

" தமிழனா நீ! இவனைக் கொல்லுங்கள் "

என்ற வார்த்தைகளை..

எதிர் காலத்தில் பயன் படக்கூடும்.

முல்லைத்தீவு.

ஒவ்வொரு ஈழத்தமிழனின்

ஒவ்வொரு அதிகாலைக் கேள்விகள்

இவ்வாறு இருக்குமோ?

நான் உயிருடன் இருக்கிறேனா?

நேற்று என்னுடன் இருந்தவர்கள்

இன்றும் இருக்கிறார்களா??

என்ன தவறு செய்தோம்

தமிழனாய் பிறந்தது தவிர...

தலைவன் இருக்கிறான்


நீ அறிந்தோ அறியாமலோ

உன் ஆரம்பமும் முடிவும்

சுபாஷ் சந்திரபோசையும்

சே குவேராவையும்

பின்பற்றியே வந்துள்ளது.

நீ அடைந்தது வீர மரணமெனில்

உனது இரத்தத் துளிகளில்.

புது விருச்சங்கள் முளைக்கும்.

புது தமிழ் உலகம் பிறக்கும்.

நீ இருப்பாயெனில்

அது உன் தலைமையில் நடக்கும்.

அதுவரை

உன் வரலாறு

மர்மமாகவே தொடரட்டும்.

வலி வலியாகவே..



நீ விட்டுச்சென்ற வலி போக்கும்

முயற்சிகள் யாவும்

வலியின் வீரியத்தைக் கூட்டுகின்றன.

கறை துடைக்கும்

குழந்தையின்

கறையான கைகளைப் போல..

Friday, June 19, 2009

நீ இருந்தவரை புரியவில்லை

உனது அருகாமை உணர்த்தாத

ஆயிரம் அர்த்தங்களை

உன்

ஒரு நாள் பிரிவு

உணர்த்தி விட்டது.