Monday, December 19, 2022

புலம் பெயர்ந்தவன்

புதுச்சுவை

பழக மறுக்கும் நாக்கு,


மொழி புரியாமல்

பதில் மறுக்கும் அதரம்.


பொருந்தா சீருடை

பொறுக்காத உடல்,


மழையின் மண்வாசனை

நுகர மறுக்கும் நாசி.


இருப்பின் இயலாமை

இறையும் இதயம்.


பிழைப்பு தேடி

புலம் பெயர்ந்தவனின்

உடல்மொழி ஒன்றும்

அவ்வளவு புதிரானதில்லை.