Thursday, March 22, 2012

மதம்பிடித்த மானிடம்

ஆங்காங்கே ஒளிந்து கொள்கிறோம்
தன்னையே தனக்குள் வைத்து .
வீரனும் கோழையும்
அடித்துக் கொள்கிறார்கள் நமக்குள்.
உண்மை என்றொன்று
இல்லையென்பதே உண்மை.
வேறென்ன செய்ய
மதம்பிடித்த மானிடப் பிறவியை
பழிப்பதன்றி?
-மதுசூதனன்