Monday, October 3, 2011

கனவுகள்

கனவுகள் எப்போதுமே நமக்கு பிடித்தமானவையாக இருக்கின்றன,நாம்

முழுக்க ,முழுக்க நாமாக இருப்பதாலேயே .

அவை தொடர்பற்ற காட்சிகளால் கோர்க்கப்பட்டுள்ளன.

நமது வெளிபடுத்தாத ஆசைகளையும்,உண்மை முகத்தையும் ,ஆழ் மன

ஆதங்ககளையும் நமது அனுமதியின்றி திரையிடுகின்றன.

சில கனவுகள் முடிவும்,தொடக்கமும் கொண்ட திரைப்படம் போல

ஆச்சர்யமூட்டுகின்றன.

நாம் பிரிந்த,இழந்த மனிதர்களுடன் மிகச் சாதாரணமாக உரையாட வைக்கின்றன.

நாம் பார்த்தேயிராத ,அனுபவம் கொள்ளாத நிகழ்வுகளும் ,சம்பவங்களும்,இடங்களும்

சம்பந்தமற்ற மனிதர்களுடன் நிகழ்த்தப் படும் கனவுகள் அறிவியலுக்கு அப்பாற்ப்பட்டது .

சில நிகழ்வுகள் நாம் ஏற்கனவே கனவில் கண்டதாய் உணர்வது எவரொருவரும்

மறுக்க இயலாதது.

நம்மை மகிழ்விக்கும் கனவுகள் சட்டென கலைத்து விடும்பொழுது ,

அதிகமாய் கோபம் கொள்கிறோம்.மீண்டும் தொடர முயற்சி கொள்கிறோம்.

நம்மை வருத்தம் கொள்ள செய்யும்,நாம் தோல்வியுற்ற கனவுகள் வெறும்

கனவுகளே என்று உணரும்பொழுது அடையும் ஆனந்தம் அளவிலாதது.

-மதுசூதனன்