கனவுக்குப்பைகள்
நினைவலைகள்..நிதர்சனங்கள்....நிழல்கள்....
Tuesday, September 27, 2011
நிலா பொழியும் நேரத்தில்
நிலா பொழியும் நேரத்தில்
நீ வந்து நின்றாய் ..
இரவு பாடகனாய்
நான் மாறிப் போனேன் .
வசந்தத்தின் இருப்பை
உன் வருகை அறிவிக்க
நான்
மரமாகிப் போனேன் .
நீ வரைந்த கோடுகள்
வானவில்லாய்
மாற
தூரிகையாய்
நான் மாறிப் போனேன்
Tuesday, September 6, 2011
கனவில்
கனவில் தொலைத்ததாய்
கண்டெடுத்து வந்து கொடுத்தாய்
நம் காதலை..
நான் நித்திரை கொண்டே நெடுநாட்களானதென்பதை
எப்படி சொல்வது உன்னிடம்?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)