Tuesday, September 27, 2011

நிலா பொழியும் நேரத்தில்

நிலா பொழியும் நேரத்தில்
நீ வந்து நின்றாய் ..
இரவு பாடகனாய்
நான் மாறிப் போனேன் .
வசந்தத்தின் இருப்பை
உன் வருகை அறிவிக்க
நான் மரமாகிப் போனேன் .
நீ வரைந்த கோடுகள்
வானவில்லாய் மாற
தூரிகையாய்
நான் மாறிப் போனேன்

Tuesday, September 6, 2011

கனவில்

கனவில் தொலைத்ததாய்
கண்டெடுத்து வந்து கொடுத்தாய்
நம் காதலை..
நான் நித்திரை கொண்டே நெடுநாட்களானதென்பதை
எப்படி சொல்வது உன்னிடம்?