நீயோ
தொலைந்தே போன
ஞாபகக்குவியல்களிலிருந்து
தேடித் தருகிறாய் நம் காதலை ...
நானோ
நிகழ்கால நினைவுகளற்ற
நித்திரையிலிருக்கிறேன்.
நான் நானாக இருப்பதின்
சங்கடங்களை
நான் மட்டுமே அறிவேன் ...
உனது
அழுகைக்கான அர்த்தங்கள் புரிவதில்லை
இருந்தும்
தொடர்ச்சியான
தீர்வுக்கான தேடலில் நான்....