Saturday, June 20, 2009

தலைவன் இருக்கிறான்


நீ அறிந்தோ அறியாமலோ

உன் ஆரம்பமும் முடிவும்

சுபாஷ் சந்திரபோசையும்

சே குவேராவையும்

பின்பற்றியே வந்துள்ளது.

நீ அடைந்தது வீர மரணமெனில்

உனது இரத்தத் துளிகளில்.

புது விருச்சங்கள் முளைக்கும்.

புது தமிழ் உலகம் பிறக்கும்.

நீ இருப்பாயெனில்

அது உன் தலைமையில் நடக்கும்.

அதுவரை

உன் வரலாறு

மர்மமாகவே தொடரட்டும்.

No comments: