Saturday, June 24, 2023

மனிதம்

 

வீட்டுப் பரண் மேல்
அணில் ஒன்று
கூடு கட்டி 
குட்டி போட்டுள்ளது.
தூக்கி போட
மனம் வரவில்லை.
பரவாயில்லை
இந்தக் கணமாவது
மனிதனாய் இருந்துவிட்டு போகிறேன்.

காலம்

 


முங்கு நீச்சலில்
எப்போதும் முந்துவது
மூன்றாம் தெரு சரவணன்!
மழைக்காலங்களில்
மறக்காமல் வறுத்த அரிசியில்
பொறித்த ஈசல் 
கொண்டுவருவாள் பரமு.
இப்போது குளமும் இல்லை! மழையும் இல்லை!
கூடித் திரிந்த குழுவும் இல்லை

எல்லோருக்குமே எல்லாமும்



எல்லாருக்குமே வானம்

எல்லோருக்குமே மழை

எல்லோருக்குமே வெயில்

எல்லோருக்குமே பனி

எல்லோருக்குமே எல்லாமும்

எங்கே வந்தது வேற்றுமை?