Monday, December 5, 2011

ஒன்றுக்கொன்று தொடர்பில்லா
முற்றுப்புள்ளிகளால்
தொடர்ந்துக் கொண்டிருக்கிறது
முடிவுறா வாழ்க்கை .
நியாயங்கள் கற்பிப்பதிலும் ,
நீ நான் என்பதிலுமான போட்டியிலும்
நிலையற்றதொரு வாழ்க்கை.
கட்டாயமாக்கப்பட்ட பந்தயத்தில்

Monday, October 3, 2011

கனவுகள்

கனவுகள் எப்போதுமே நமக்கு பிடித்தமானவையாக இருக்கின்றன,நாம்

முழுக்க ,முழுக்க நாமாக இருப்பதாலேயே .

அவை தொடர்பற்ற காட்சிகளால் கோர்க்கப்பட்டுள்ளன.

நமது வெளிபடுத்தாத ஆசைகளையும்,உண்மை முகத்தையும் ,ஆழ் மன

ஆதங்ககளையும் நமது அனுமதியின்றி திரையிடுகின்றன.

சில கனவுகள் முடிவும்,தொடக்கமும் கொண்ட திரைப்படம் போல

ஆச்சர்யமூட்டுகின்றன.

நாம் பிரிந்த,இழந்த மனிதர்களுடன் மிகச் சாதாரணமாக உரையாட வைக்கின்றன.

நாம் பார்த்தேயிராத ,அனுபவம் கொள்ளாத நிகழ்வுகளும் ,சம்பவங்களும்,இடங்களும்

சம்பந்தமற்ற மனிதர்களுடன் நிகழ்த்தப் படும் கனவுகள் அறிவியலுக்கு அப்பாற்ப்பட்டது .

சில நிகழ்வுகள் நாம் ஏற்கனவே கனவில் கண்டதாய் உணர்வது எவரொருவரும்

மறுக்க இயலாதது.

நம்மை மகிழ்விக்கும் கனவுகள் சட்டென கலைத்து விடும்பொழுது ,

அதிகமாய் கோபம் கொள்கிறோம்.மீண்டும் தொடர முயற்சி கொள்கிறோம்.

நம்மை வருத்தம் கொள்ள செய்யும்,நாம் தோல்வியுற்ற கனவுகள் வெறும்

கனவுகளே என்று உணரும்பொழுது அடையும் ஆனந்தம் அளவிலாதது.

-மதுசூதனன்

Tuesday, September 27, 2011

நிலா பொழியும் நேரத்தில்

நிலா பொழியும் நேரத்தில்
நீ வந்து நின்றாய் ..
இரவு பாடகனாய்
நான் மாறிப் போனேன் .
வசந்தத்தின் இருப்பை
உன் வருகை அறிவிக்க
நான் மரமாகிப் போனேன் .
நீ வரைந்த கோடுகள்
வானவில்லாய் மாற
தூரிகையாய்
நான் மாறிப் போனேன்

Tuesday, September 6, 2011

கனவில்

கனவில் தொலைத்ததாய்
கண்டெடுத்து வந்து கொடுத்தாய்
நம் காதலை..
நான் நித்திரை கொண்டே நெடுநாட்களானதென்பதை
எப்படி சொல்வது உன்னிடம்?

Wednesday, June 15, 2011

நீ

நீயோ
தொலைந்தே போன
ஞாபகக்குவியல்களிலிருந்து
தேடித் தருகிறாய் நம் காதலை ...
நானோ
நிகழ்கால நினைவுகளற்ற
நித்திரையிலிருக்கிறேன்.

Tuesday, June 14, 2011

நான் நானாக...

நான் நானாக இருப்பதின்
சங்கடங்களை
நான் மட்டுமே அறிவேன் ...

உனது அழுகை..

உனது
அழுகைக்கான அர்த்தங்கள் புரிவதில்லை
இருந்தும்
தொடர்ச்சியான
தீர்வுக்கான தேடலில் நான்....