கனவுக்குப்பைகள்
நினைவலைகள்..நிதர்சனங்கள்....நிழல்கள்....
Friday, October 26, 2012
ஏன் வாழ்கிறோம்
எந்த மாதிரியான தேசத்தில்
வாழ்கிறோம் என்பதை விட
ஏன் வாழ்கிறோம் என்கிற
கேள்வியே மேலோங்கி நிற்கிறது.
நான் நானா ?
நாளை ஒரு நாள்
நான் பிறக்க கூடும்
என்ற நம்பிக்கையிலேயே...
தினம் தினம் ஒருவனாய்
என்னை சாகடிக்கிறேன்.
Monday, October 15, 2012
மனமுகம்
மனமுகம்
முகம்
சற்றே
அகோரமாய்
மாறக்
கண்டு
அதிர்ச்சியுற்றேன்.
மனம்
போகும்
போக்கிலே
முகம்
மாறக்
கடவதாய்
கட்டளையிட்டுருப்பதாய்
சொல்லி
சென்றான்
கடவுளரில்
ஒருவன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)