Friday, October 26, 2012

ஏன் வாழ்கிறோம்

எந்த மாதிரியான தேசத்தில்
வாழ்கிறோம் என்பதை விட
ஏன் வாழ்கிறோம் என்கிற
கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

நான் நானா ?

நாளை ஒரு நாள்
நான் பிறக்க கூடும்
என்ற நம்பிக்கையிலேயே...
தினம் தினம் ஒருவனாய்
என்னை சாகடிக்கிறேன்.

Monday, October 15, 2012

மனமுகம்


மனமுகம்
முகம் சற்றே அகோரமாய் 
மாறக் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
மனம் போகும் போக்கிலே 
முகம் மாறக் கடவதாய்
 கட்டளையிட்டுருப்பதாய் 
 சொல்லி சென்றான் 
 கடவுளரில் ஒருவன்.