Friday, July 2, 2010

வயதும் வருத்தமும்

சிறுவர்கள்
பெரியவர்களாக ஆசைப்படுவதும்

மீசை வரைந்து
மகிழ்ச்சி கொள்வதும்,

பெரியவர்கள்
சிறியவர்களாய் நினைத்துக் கொள்வதும்

மீசை மழித்து
முகம் பார்ப்பதும்,

வயதின் வருத்தம்
வாடிக்கையே எல்லாருக்கும் எப்போதும்.

நீ,கவிதை ,காரணம்

எங்கேனும் ஒளிந்திருக்கும்

என்னோடு நீ இல்லாமல்போன காரணங்கள்.

அவை சொல்லும்

உன்னைப் பற்றிய கவிதைகளுக்கான அர்த்தங்களை....