பொதுவாக
முகம் தெரியாத மனிதர்களே
நாம் போகவேண்டிய
இடத்திற்கான வழி சொல்கிறார்கள்.
Friday, July 3, 2009
வார்த்தைகளற்ற...
வார்த்தைகளற்ற உன் மௌனங்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன் காதலை..
ஓயாமல் பேசினாலும்
உணர்த்த முடிவதில்லை என்னால்...
Saturday, June 20, 2009
தமிழகமே!!
உன் நாட்குறிப்பேடுகளிலோ
உன்னை ஞாபகமூட்டும் சாதனங்களிலோ
குறிப்பேற்றிக் கொள்
'ஈழம்' என்ற வார்த்தையை..
சில நாட்களில் நீங்கள்
மறந்து விடக்கூடும்.
கூடவே பழக்கப்படுத்திக்கொள்
" தமிழனா நீ! இவனைக் கொல்லுங்கள் "
என்ற வார்த்தைகளை..
எதிர் காலத்தில் பயன் படக்கூடும்.
முல்லைத்தீவு.
ஒவ்வொரு ஈழத்தமிழனின்
ஒவ்வொரு அதிகாலைக் கேள்விகள்
இவ்வாறு இருக்குமோ?
நான் உயிருடன் இருக்கிறேனா?
நேற்று என்னுடன் இருந்தவர்கள்
இன்றும் இருக்கிறார்களா??
என்ன தவறு செய்தோம்
தமிழனாய் பிறந்தது தவிர...
தலைவன் இருக்கிறான்
நீ அறிந்தோ அறியாமலோ
உன் ஆரம்பமும் முடிவும்
சுபாஷ் சந்திரபோசையும்
சே குவேராவையும்
பின்பற்றியே வந்துள்ளது.
நீ அடைந்தது வீர மரணமெனில்
உனது இரத்தத் துளிகளில்.
புது விருச்சங்கள் முளைக்கும்.
புது தமிழ் உலகம் பிறக்கும்.
நீ இருப்பாயெனில்
அது உன் தலைமையில் நடக்கும்.
அதுவரை
உன் வரலாறு
மர்மமாகவே தொடரட்டும்.
வலி வலியாகவே..
நீ விட்டுச்சென்ற வலி போக்கும்
முயற்சிகள் யாவும்
வலியின் வீரியத்தைக் கூட்டுகின்றன.
கறை துடைக்கும்
குழந்தையின்
கறையான கைகளைப் போல..
Friday, June 19, 2009
நீ இருந்தவரை புரியவில்லை
உனது அருகாமை உணர்த்தாத
ஆயிரம் அர்த்தங்களை
உன்
ஒரு நாள் பிரிவு
உணர்த்தி விட்டது.
Tuesday, March 24, 2009
Friday, December 5, 2008
Thursday, June 26, 2008
Subscribe to:
Posts (Atom)