Friday, January 5, 2024

கடவுள்

 

காசுக்கு கொலை செய்பவன் 

காணிக்கை வைக்காமல்

தொழிலுக்கு செல்வதில்லை,

திருநீறு இல்லாமல்

திருடப்போவதேயில்லை

திருடன்,

லஞ்சப் பணத்தை

கடவுள் மறுத்ததுமில்லை,

திருட்டுக் குடுத்தவன் மனுவும் மறுக்கப் பட்டதில்லை,

கொலையுண்டவன்

குடும்பம் கோவிலில்

குற்றப்பத்திரிகை

வைக்க மறந்ததில்லை

எல்லோருக்கும் எல்லாமுமாக

கடவுளாய் இருப்பது

ஒன்றும் அவ்வளவு

எளிதில்லை!