Friday, January 19, 2024

கடவுள்

 

புதிய கோவிலுக்கு கடவுள் வர மறுக்கிறார்.

இது உங்கள் கோவில்
நீங்கள் வந்தே ஆக வேண்டுமென கட்டளை இடுகிறான் அரசன்.

நான் ஏற்கனவே இங்கேதான் இருந்தேன்.
நீதான் என்னை துரத்தினாய் என்கிறார் கடவுள்.

அது வேறொருவர்
என்கிறான் அரசன்.

அது உனது புரிதல் 
என்கிறார் கடவுள்.

நான் எங்குமே அங்கே இல்லை.
நீயே நிறைந்து இருக்கிறாய் 
வந்தாலும் என்னை வணங்க யாரும் வரப் போவதில்லை என்று சொல்லி மறைகிறார்!