Saturday, June 20, 2009

தமிழகமே!!

உன் நாட்குறிப்பேடுகளிலோ

உன்னை ஞாபகமூட்டும் சாதனங்களிலோ

குறிப்பேற்றிக் கொள்

'ஈழம்' என்ற வார்த்தையை..

சில நாட்களில் நீங்கள்

மறந்து விடக்கூடும்.

கூடவே பழக்கப்படுத்திக்கொள்

" தமிழனா நீ! இவனைக் கொல்லுங்கள் "

என்ற வார்த்தைகளை..

எதிர் காலத்தில் பயன் படக்கூடும்.

முல்லைத்தீவு.

ஒவ்வொரு ஈழத்தமிழனின்

ஒவ்வொரு அதிகாலைக் கேள்விகள்

இவ்வாறு இருக்குமோ?

நான் உயிருடன் இருக்கிறேனா?

நேற்று என்னுடன் இருந்தவர்கள்

இன்றும் இருக்கிறார்களா??

என்ன தவறு செய்தோம்

தமிழனாய் பிறந்தது தவிர...

தலைவன் இருக்கிறான்


நீ அறிந்தோ அறியாமலோ

உன் ஆரம்பமும் முடிவும்

சுபாஷ் சந்திரபோசையும்

சே குவேராவையும்

பின்பற்றியே வந்துள்ளது.

நீ அடைந்தது வீர மரணமெனில்

உனது இரத்தத் துளிகளில்.

புது விருச்சங்கள் முளைக்கும்.

புது தமிழ் உலகம் பிறக்கும்.

நீ இருப்பாயெனில்

அது உன் தலைமையில் நடக்கும்.

அதுவரை

உன் வரலாறு

மர்மமாகவே தொடரட்டும்.

வலி வலியாகவே..



நீ விட்டுச்சென்ற வலி போக்கும்

முயற்சிகள் யாவும்

வலியின் வீரியத்தைக் கூட்டுகின்றன.

கறை துடைக்கும்

குழந்தையின்

கறையான கைகளைப் போல..

Friday, June 19, 2009

நீ இருந்தவரை புரியவில்லை

உனது அருகாமை உணர்த்தாத

ஆயிரம் அர்த்தங்களை

உன்

ஒரு நாள் பிரிவு

உணர்த்தி விட்டது.

Tuesday, March 24, 2009

உன்

உடல்மொழி கூறும்

ஒரு கோடி அர்த்தங்களை

நான் புரிய

நான்கேழு பிறவி வேண்டுமோ??

Friday, December 5, 2008

அம்மா


Thursday, June 26, 2008

கருப்பு

பிடித்த நிறம்
என்பதாலோ என்னவோ
வாழ்க்கை இருண்டே கிடக்கிறது.

Monday, April 28, 2008

புரியாத விளக்கங்கள்..

எப்படியும் 
ஏதோ எழுத வேண்டுமென்று 
எழுதியதை 
எப்போது எப்படி எழுதினாய் 
என்று கேட்டால் எப்படிச் சொல்வது?

Monday, April 21, 2008

படித்ததில் பிடித்தது..

சிறகிலிருந்து
பிரிந்த இறகு
காற்றின் தீராதப் பக்கங்களில்
பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..
- கவிஞர் பிரமிள்