ஊர் கூடி
தேர் இழுக்க
குழந்தை
வடம் பிடித்ததும்
நகரத் தொடங்கியது.
புதுச்சுவை
பழக மறுக்கும் நாக்கு,
மொழி புரியாமல்
பதில் மறுக்கும் அதரம்.
பொருந்தா சீருடை
பொறுக்காத உடல்,
மழையின் மண்வாசனை
நுகர மறுக்கும் நாசி.
இருப்பின் இயலாமை
இறையும் இதயம்.
பிழைப்பு தேடி
புலம் பெயர்ந்தவனின்
உடல்மொழி ஒன்றும்
அவ்வளவு புதிரானதில்லை.
அதிகாலை பரபரப்பிற்கு
தகுதி குறித்த கேள்விகளை
அவர் எப்போதும்
உங்களுடன் இருப்பார்
அன்னை குடுக்கும் அரவணைப்பு போல.
நீங்கள் சொல்லும்
எதையும்
காதுகுடுத்து கேட்பார்.
நீங்கள் விரும்பும்
வண்ணம் குடுக்கலாம்.
தோற்றம் அணிவிக்கலாம்
ஒரு குழந்தையை
அழகு படுத்து்வது போல..
ஆம்
அவர் எப்போதும்
இருப்பார் ஒரு நண்பன் கொடுக்கும் நம்பிக்கை போல.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஜன்னல்களை
திறந்து வை.
ஒரு விசும்பல்
சத்தத்தில்
உனது வெறுப்பை
உணர்ந்து கொள்வேன்.
உனது சிரிப்பின் வாசனையில்
விருப்பம் தெரிந்து கொள்வேன்.
பதில்கள் எப்போதும்
சொற்களால்தான்
நிரப்பப் பட வேண்டுமென்பதில்லை
ஒரு பெருங்கனவாய்
விரவிக் கிடக்கிறது
பேரன்பின் சமவெளி.
கருணையின் சிறுதுளி
அக்கனவை துரத்துகிறது.
நம்பிக்கையின் காலடியொற்றி
பாதைகள் மாறுகின்றன.
குழந்தை பகிரும் பருக்கையில்
பிரம்மம் அடங்கித் தணிகிறது.