அம்மாவாசை இரவின்
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
கரை சேர்க்கத்தான்
செய்கின்றன
ஆமைகளை
அதன் கூடு நோக்கி.
=====================
சுற்றித் திரிந்த
நாய்க்குட்டிக்கு
குழந்தையிட்ட
விபூதிக்கீற்று
கோவில் பிரகாரமெங்கும்
விரவிக் கிடக்கிறது.
====================
கிழவியொருத்தி
தூக்கிப் போட்ட
உணவுத் துண்டை
தூக்கிச் செல்லும்
காக்கையின்
இறகுகளில் இருக்கிறது
எஞ்சியிருக்கும்
கருணையின் துளி.
=======≠===============