Thursday, December 15, 2022

நாளை

எவ்வளவு முயன்றும்
முடிக்க முடியா கவிதையொன்று,
எவ்வளவு எழுதியும்
தீராப் பக்கமொன்று,
எவ்வளவு சொல்லியும்
புரிபடாத சோகமொன்று,
நீண்ட நாள் 
வீடு திரும்பா
நெருங்கிய சொந்தமொன்று,
விடை தெரியாத
நீண்ட கனவோன்று,
எவ்வளவு பேசியும்
தீர்க்க முடியாத பகையொன்று,
எல்லாவற்றிற்கும்
சான்றாக இந்த வானமுண்டு.
நாளை என்ற
ஒற்றைப் பதிலுமுண்டு.