Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, December 5, 2008

அம்மா


Thursday, June 26, 2008

கருப்பு

பிடித்த நிறம்
என்பதாலோ என்னவோ
வாழ்க்கை இருண்டே கிடக்கிறது.

Sunday, April 20, 2008

கேள்வியும் பதிலும்..


தவறான பதில்களே

கிடைப்பதறிந்தும்

கேட்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன

தவறான கேள்விகள்.

Monday, April 7, 2008

முடிக்காத கவிதை

முடிக்க முடியாக்
கவிதையொன்று
விழுங்க முடியா
மிடறு போல்
முன் தொண்டையில் தவிக்கிறது.
தேடும் வார்த்தைகளோ
தனிமைப்படுத்துகின்றன...
பெருங்கூட்டத்தின் நடுவேயும்.

Wednesday, April 2, 2008

சூரியனாய்..



கலைந்த கனவொன்றைத் தேடி
காற்றில் கரைகிறேன்.
காற்றோ
சிறு ஒளிக்கீற்றாக்கி
என்னை
உனது அறையில்
கசிய விடுகிறது.
நானும் சிறு நிலவாகி
உன்னை வெளிச்சமாக்குகிறேன்.
நீயோ பிரதிபலித்து
என்னை சூரியனாக்குகிறாய்
..

Tuesday, April 1, 2008

உன்னைத் தேடி...


வண்ணத்துப்பூச்சிகளிடம்
வழி கேட்கிறேன்
வீசும் காற்றில்

வாசம் பார்க்கிறேன்
நிலவிடம்
நிலவரம் அறிகிறேன்

நீ இல்லாத நாட்களில்
வேறென்ன செய்ய
உன்னை தேடுவதன்றி..

Monday, March 31, 2008

தூரிகை உன் கைகள்


நிலா பிடிக்கும்

உன் கைகள்

காற்றில்

வானவில் வரைகின்றன.


Thursday, March 27, 2008

பொதுவாக

முதுமை


ஆழ்ந்த நித்திரையென்றாலும்

பயமாகவே இருக்கிறது..

லஞ்சம்

முடியாதது என்று

எதுவுமே இல்லை.


சம்பளம்

பிடிக்கா விட்டாலும்

பிடித்தத்துடனே

ஒவ்வொரு மாதமும்.


Thursday, March 20, 2008

நீ நான் நாம்


பெருந்திரளான வார்த்தைகளின் நடுவே
கோர்க்க முடியாக்
கவிதையாய்
நீயும் நம் காதலும்.....

Saturday, January 20, 2007

கவலைகள்


நினைவுகள்


Friday, January 12, 2007

கனவில்....


Thursday, January 11, 2007

உன் வாசம்

நீ விட்டுச்சென்ற
வாசம் தொலைக்க
என் தோட்டத்து மலர்கள்
முயன்று முயன்று
தோற்றுக்கொண்டிருக்கின்றன.


அழுகுரல்கள்




மலர்களாய்...


இசைக் குறிப்பாய்...


உன் பார்வை


தூக்கம் தொலைத்தாய்..


தலைப்பு


என் உலகம்