Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Friday, December 5, 2008
Thursday, June 26, 2008
Sunday, April 20, 2008
Monday, April 7, 2008
முடிக்காத கவிதை
முடிக்க முடியாக்
கவிதையொன்று
விழுங்க முடியா
மிடறு போல்
முன் தொண்டையில் தவிக்கிறது.
தேடும் வார்த்தைகளோ
தனிமைப்படுத்துகின்றன...
பெருங்கூட்டத்தின் நடுவேயும்.
கவிதையொன்று
விழுங்க முடியா
மிடறு போல்
முன் தொண்டையில் தவிக்கிறது.
தேடும் வார்த்தைகளோ
தனிமைப்படுத்துகின்றன...
பெருங்கூட்டத்தின் நடுவேயும்.
Wednesday, April 2, 2008
சூரியனாய்..
கலைந்த கனவொன்றைத் தேடி
காற்றில் கரைகிறேன்.
காற்றோ
சிறு ஒளிக்கீற்றாக்கி
என்னை
உனது அறையில்
கசிய விடுகிறது.
நானும் சிறு நிலவாகி
உன்னை வெளிச்சமாக்குகிறேன்.
நீயோ பிரதிபலித்து
என்னை சூரியனாக்குகிறாய்..
Tuesday, April 1, 2008
உன்னைத் தேடி...
வண்ணத்துப்பூச்சிகளிடம்
வழி கேட்கிறேன்
வீசும் காற்றில்
வாசம் பார்க்கிறேன்
நிலவிடம்
நிலவரம் அறிகிறேன்
நீ இல்லாத நாட்களில்
வேறென்ன செய்ய
உன்னை தேடுவதன்றி..
வழி கேட்கிறேன்
வீசும் காற்றில்
வாசம் பார்க்கிறேன்
நிலவிடம்
நிலவரம் அறிகிறேன்
நீ இல்லாத நாட்களில்
வேறென்ன செய்ய
உன்னை தேடுவதன்றி..
Monday, March 31, 2008
Thursday, March 27, 2008
பொதுவாக
முதுமை
ஆழ்ந்த நித்திரையென்றாலும்
பயமாகவே இருக்கிறது..
லஞ்சம்
முடியாதது என்று
எதுவுமே இல்லை.
சம்பளம்
பிடிக்கா விட்டாலும்
பிடித்தத்துடனே
ஒவ்வொரு மாதமும்.
Thursday, March 20, 2008
Saturday, January 20, 2007
Friday, January 12, 2007
Thursday, January 11, 2007
Subscribe to:
Posts (Atom)