Tuesday, April 1, 2008

உன்னைத் தேடி...


வண்ணத்துப்பூச்சிகளிடம்
வழி கேட்கிறேன்
வீசும் காற்றில்

வாசம் பார்க்கிறேன்
நிலவிடம்
நிலவரம் அறிகிறேன்

நீ இல்லாத நாட்களில்
வேறென்ன செய்ய
உன்னை தேடுவதன்றி..

3 comments:

consultant said...

அருமையான க‌விதை ந‌ண்பா..

என்னோடு
சுற்றிக்கொண்டிருந்து
உருப்படாமல் போனது
நான் ம‌ட்டும‌ல்ல‌... நீயும் தான்
என்ப‌தில் ம‌‌கிழ்ச்சி...

உன்
மெளனங்களின்
அர்த்தமோ
வார்த்தைகளின்
விளக்கமோ
அறியமுடியாது...
எத்த‌னைப் புத்த‌க‌ங்க‌ளை
ப‌டித்தும்!

மதுசூதனன் said...

நன்றி நண்பா....

தமிழினால் தறுதலையாக

வேண்டுமென்றால்

நான் தயார்தான்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றாக இருக்கிறது கவிதை

-ப்ரியமுடன்
சேரல்