பிறந்து வளர்ந்த ஊரை
கடக்கும்போதெல்லாம்
கூடவே சேர்ந்து
பயணிக்கிறது பால்யமும்.
மறப்பது ஒரு வரம்
புதுச்சுவை
பழக மறுக்கும் நாக்கு,
மொழி புரியாமல்
பதில் மறுக்கும் அதரம்.
பொருந்தா சீருடை
பொறுக்காத உடல்,
மழையின் மண்வாசனை
நுகர மறுக்கும் நாசி.
இருப்பின் இயலாமை
இறையும் இதயம்.
பிழைப்பு தேடி
புலம் பெயர்ந்தவனின்
உடல்மொழி ஒன்றும்
அவ்வளவு புதிரானதில்லை.
அதிகாலை பரபரப்பிற்கு
தகுதி குறித்த கேள்விகளை