கனவுக்குப்பைகள்
நினைவலைகள்..நிதர்சனங்கள்....நிழல்கள்....
Tuesday, September 27, 2011
நிலா பொழியும் நேரத்தில்
நிலா பொழியும் நேரத்தில்
நீ வந்து நின்றாய் ..
இரவு பாடகனாய்
நான் மாறிப் போனேன் .
வசந்தத்தின் இருப்பை
உன் வருகை அறிவிக்க
நான்
மரமாகிப் போனேன் .
நீ வரைந்த கோடுகள்
வானவில்லாய்
மாற
தூரிகையாய்
நான் மாறிப் போனேன்
Tuesday, September 6, 2011
கனவில்
கனவில் தொலைத்ததாய்
கண்டெடுத்து வந்து கொடுத்தாய்
நம் காதலை..
நான் நித்திரை கொண்டே நெடுநாட்களானதென்பதை
எப்படி சொல்வது உன்னிடம்?
Wednesday, June 15, 2011
நீ
நீயோ
தொலைந்தே போன
ஞாபகக்குவியல்களிலிருந்து
தேடித் தருகிறாய் நம் காதலை ...
நானோ
நிகழ்கால நினைவுகளற்ற
நித்திரையிலிருக்கிறேன்.
Tuesday, June 14, 2011
நான் நானாக...
நான் நானாக இருப்பதின்
சங்கடங்களை
நான் மட்டுமே அறிவேன் ...
உனது அழுகை..
உனது
அழுகைக்கான அர்த்தங்கள் புரிவதில்லை
இருந்தும்
தொடர்ச்சியான
தீர்வுக்கான தேடலில் நான்....
Wednesday, July 14, 2010
படித்ததில் பிடித்தது.
வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!
Sunday, July 4, 2010
படித்ததில் பிடித்தது.
இவளும் இவனும்
Friday, July 2, 2010
வயதும் வருத்தமும்
சிறுவர்கள்
பெரியவர்களாக ஆசைப்படுவதும்
மீசை வரைந்து
மகிழ்ச்சி கொள்வதும்,
பெரியவர்கள்
சிறியவர்களாய் நினைத்துக் கொள்வதும்
மீசை மழித்து
முகம் பார்ப்பதும்,
வயதின் வருத்தம்
வாடிக்கையே எல்லாருக்கும் எப்போதும்.
நீ,கவிதை ,காரணம்
எங்கேனும் ஒளிந்திருக்கும்
என்னோடு நீ இல்லாமல்போன காரணங்கள்.
அவை சொல்லும்
உன்னைப் பற்றிய கவிதைகளுக்கான அர்த்தங்களை....
Saturday, September 5, 2009
தேவதைகள்
தேவதைகள்
சொல்லிவைத்து வருவதில்லையென்றாலும்..
சட்டென வந்து நிற்பதும்,
வரங்கள் தந்து மகிழ்விப்பதும்
தற்செயலானதல்ல..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)