Tuesday, September 27, 2011

நிலா பொழியும் நேரத்தில்

நிலா பொழியும் நேரத்தில்
நீ வந்து நின்றாய் ..
இரவு பாடகனாய்
நான் மாறிப் போனேன் .
வசந்தத்தின் இருப்பை
உன் வருகை அறிவிக்க
நான் மரமாகிப் போனேன் .
நீ வரைந்த கோடுகள்
வானவில்லாய் மாற
தூரிகையாய்
நான் மாறிப் போனேன்

No comments: