Friday, October 26, 2012
Monday, October 15, 2012
மனமுகம்
மனமுகம்
முகம் சற்றே அகோரமாய்
மாறக் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
மனம் போகும் போக்கிலே
முகம் மாறக் கடவதாய்
கட்டளையிட்டுருப்பதாய்
சொல்லி சென்றான்
கடவுளரில் ஒருவன்.
Thursday, May 10, 2012
Friday, May 4, 2012
மனமொழி
மனமொழி
------------------------------
ஆங்கிலம் இந்தி
என பிற மொழிகளை
என் மகளுக்கு
கற்பிக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறாள்
என் மனைவி.
மொழிகளை படிப்பதைக்
காட்டிலும்
மனங்களை படிப்பதே
அவசியம் என
எப்படி சொல்வது அவளிடம்?
------------------------------
ஆங்கிலம் இந்தி
என பிற மொழிகளை
என் மகளுக்கு
கற்பிக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறாள்
என் மனைவி.
மொழிகளை படிப்பதைக்
காட்டிலும்
மனங்களை படிப்பதே
அவசியம் என
எப்படி சொல்வது அவளிடம்?
குழந்தைகளின் உலகம்
குழந்தைகளின் உலகம்
------------------------------
நாம் செய்வதையெல்லாம்
செய்து காட்டும் கணத்திலிருந்து
தொடங்கி விடுகிறது,
அவளது எதிர்காலம்
குறித்த அச்சம்.
---------------------------------------------------------------------
குழந்தைகளின் உலகத்திற்கான
நுழைவாயிலில் அறிவிப்புப்பலகை
"பொய் பேசுபவர்களுக்கு இடமில்லை"
அதனாலோ என்னவோ
இன்னும் அது
அவர்களின் உலகமாய் இருக்கிறது.
------------------------------
செய்து காட்டும் கணத்திலிருந்து
தொடங்கி விடுகிறது,
அவளது எதிர்காலம்
குறித்த அச்சம்.
------------------------------
குழந்தைகளின் உலகத்திற்கான
நுழைவாயிலில் அறிவிப்புப்பலகை
"பொய் பேசுபவர்களுக்கு இடமில்லை"
அதனாலோ என்னவோ
இன்னும் அது
அவர்களின் உலகமாய் இருக்கிறது.
Thursday, May 3, 2012
நம்பிக்கையின்மை
இரவுகளில்
லிப்ட் கேட்பவரை
தவிர்த்துச் செல்லும்போது
கோபம் கொள்கிறது மனது
நம்பிக்கையின்மையை
கற்றுக்கொடுத்த
இந்தச்சமூகத்தை நினைத்து..
லிப்ட் கேட்பவரை
தவிர்த்துச் செல்லும்போது
கோபம் கொள்கிறது மனது
நம்பிக்கையின்மையை
கற்றுக்கொடுத்த
இந்தச்சமூகத்தை நினைத்து..
கதைகள்
தூக்கம் வர
கதை சொல்ல சொல்லி
நச்சரிக்கிறாள் என் மகள்.
உண்மை தவிர்த்த
வெறும் கட்டு கதைகளாலேயே
இவளது எதிர்கால உலகம்
நிரம்பியுள்ளது என்பதறியாமல்.
கதை சொல்ல சொல்லி
நச்சரிக்கிறாள் என் மகள்.
உண்மை தவிர்த்த
வெறும் கட்டு கதைகளாலேயே
இவளது எதிர்கால உலகம்
நிரம்பியுள்ளது என்பதறியாமல்.
Thursday, March 22, 2012
மதம்பிடித்த மானிடம்
ஆங்காங்கே ஒளிந்து கொள்கிறோம்
தன்னையே தனக்குள் வைத்து .
வீரனும் கோழையும்
அடித்துக் கொள்கிறார்கள் நமக்குள்.
உண்மை என்றொன்று
இல்லையென்பதே உண்மை.
வேறென்ன செய்ய
மதம்பிடித்த மானிடப் பிறவியை
பழிப்பதன்றி?
-மதுசூதனன்
Thursday, February 9, 2012
வார்த்தைகளற்ற வாஞ்சைகள்
இன்னும் அடைந்தே கிடக்கின்றன
அளப்பறியா அன்பும் பாசமும்.
உறுதிப்படுத்த உதாரணங்களே
இங்கே தேவைப்படுகின்றன.
வார்த்தைகளற்ற வாஞ்சைகளை
உணரும் மனங்கள்
மரித்து வருகின்றன
என்பதே உண்மை.
Subscribe to:
Posts (Atom)