கனவுக்குப்பைகள்
நினைவலைகள்..நிதர்சனங்கள்....நிழல்கள்....
Friday, July 2, 2010
வயதும் வருத்தமும்
சிறுவர்கள்
பெரியவர்களாக ஆசைப்படுவதும்
மீசை வரைந்து
மகிழ்ச்சி கொள்வதும்,
பெரியவர்கள்
சிறியவர்களாய் நினைத்துக் கொள்வதும்
மீசை மழித்து
முகம் பார்ப்பதும்,
வயதின் வருத்தம்
வாடிக்கையே எல்லாருக்கும் எப்போதும்.
நீ,கவிதை ,காரணம்
எங்கேனும் ஒளிந்திருக்கும்
என்னோடு நீ இல்லாமல்போன காரணங்கள்.
அவை சொல்லும்
உன்னைப் பற்றிய கவிதைகளுக்கான அர்த்தங்களை....
Saturday, September 5, 2009
தேவதைகள்
தேவதைகள்
சொல்லிவைத்து வருவதில்லையென்றாலும்..
சட்டென வந்து நிற்பதும்,
வரங்கள் தந்து மகிழ்விப்பதும்
தற்செயலானதல்ல..
Saturday, July 18, 2009
நான்
நீ நீயாக இல்லாத
நாட்களில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..
Saturday, July 11, 2009
உன்..
உன் வெறுமை
ஏற்படுத்தும் கோபங்கள்
சற்றென கொல்லப்படுகின்றன.
சூழ்நிலைக் கூச்சல்கள்
குற்றமாய்த் தெரியவில்லை.
தனிமையின் அதிர்வுகள்
ஏனோ அந்நியப்படுத்துவதில்லை.
இன்னும் இருக்கின்றன
நீ விட்டுச்சென்ற
உன் நிமிடங்கள்.
Wednesday, July 8, 2009
உன் நினைவுகளற்ற....
உன் நினைவுகளற்ற இரவுகளையும்
நீ வந்து போகாத கனவுகளையும்
வெறிச்சோடிப்போன
அதிகாலை வானம்
நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது...
நேற்றிரவு...
நேற்றிரவு
நண்பனொருவன்
சொல்லிச்சென்றான்
நீ நல்லவனாக இருப்பதே
பெரும் பிரச்சனையென்று...
Tuesday, July 7, 2009
யாருமல்லாத யாரையோ..
யாருமல்லாத யாரையோ
நாம் எல்லோரும்
பிரதிபலித்து வாழ்ந்துவருவதாக
நேற்றைய கனவில்
நான் நானுமல்லாத
என்னிடம் சொன்னேன்.
பிரியமற்றே....
பிரியமற்றே இருந்திருக்கின்றன
உன் வீட்டு நாய்க்குட்டியும்
என் வீட்டு நாய்க்குட்டியும்
நாம் பிரியப்போவதறிந்து...
Saturday, July 4, 2009
இன்னுமொரு...
இன்னுமொரு
சாதாரண பொழுதென கழிகின்றன
உன் கணங்கள்.
நானோ
சலனமூட்டும் உன்னுடனான
சந்திப்புகளை தவிர்க்கும்
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)