முங்கு நீச்சலில்
எப்போதும் முந்துவது
மூன்றாம் தெரு சரவணன்!
மழைக்காலங்களில்
மறக்காமல் வறுத்த அரிசியில்
பொறித்த ஈசல்
கொண்டுவருவாள் பரமு.
இப்போது குளமும் இல்லை! மழையும் இல்லை!
கூடித் திரிந்த குழுவும் இல்லை
எல்லாருக்குமே வானம்
எல்லோருக்குமே மழை
எல்லோருக்குமே வெயில்
எல்லோருக்குமே பனி
எல்லோருக்குமே எல்லாமும்
எங்கே வந்தது வேற்றுமை?
சரணம்