Wednesday, March 1, 2023

உன் கள்ளச்சிரிப்பில்

 சரணம்


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்

நீ அங்கு நடக்க
நான் இங்கே விழுந்தேன்

நீ இல்லா இடத்தில்
நான் இறந்தே கிடந்தேன்

நீ வந்த நொடியில்
உயிர் பற்றி எழுந்தேன்


பல்லவி1

ஒரு வெட்ட வெளியில்
பட்ட மரமாய் 
நான் வீழ்ந்து கிடந்தேன்
ஒரு சொட்டும் மழையாய்
பட்டு தெறித்தாய்
நான் பூக்கள் விரித்தேன்
உயிர் பெற்ற மரமாய்!


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்

நீ அங்கு நடக்க
நான் இங்கே விழுந்தேன்

நீ இல்லா இடத்தில்
நான் இறந்தே கிடந்தேன்

நீ வந்த நொடியில்
உயிர் பற்றி எழுந்தேன்

பல்லவி2

அந்த வானக்குடையில்
ஒரு நட்சத்திரமாய்
மின்னும் பொழுதில்
உன்னைக் கடந்தேன்
எந்தன் இரவு
இன்று பகலாய்
மாறிக் கிடக்க
நான் தூக்கம் தொலைத்தேன்


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்