ஒரு பெரும் வலி தேவையாய்தானிருக்கிறது,
கொடுங்காய்ச்சல் ஒன்றும்,
எத்தனை போர்த்தியும்
மாளாத குளிர் ஒன்றும்,
வேர்த்தும் பிடிபடாத
வெம்மையோன்றும்,
எல்லாமும் எப்போதேனும்
தேவையாய்தானிருக்கிறது,
எனது நாளை என்பது
எத்தனை இயல்பானது என்று புரிய வைக்
எல்லாருக்குமே வானம்
எல்லோருக்குமே மழை
எல்லோருக்குமே வெயில்
எல்லோருக்குமே பனி
எல்லோருக்குமே எல்லாமும்
எங்கே வந்தது வேற்றுமை?