Sunday, February 16, 2025

கடவுள்

கோவில் மதிற்சுவர்களில் எழுதி செல்கிறார்கள் விண்ணப்பங்களை, விருப்பச் சீட்டுகள் இடமில்லாமல் இறைந்து கிடக்கின்றன, வேண்டுதல்கள் மனனமாகி விட்டன, அர்ச்சனைகள் அசரரீகளாய் மோதி செல்கின்றன, கடவுள் கவனித்துக் கொண்டுதான்  இருக்கிறார் கவலையின்றி..

Saturday, July 20, 2024

காதல் சூரியன்

கூடாத கனவு

வாடகை வாழ்க்கை

கருணைக் காயங்கள்

திருவிழா காலம்

முடியாதொரு சொப்பனம்

ஊதுவர்த்தியொன்று உணரமுடியாதபடி அணைவதுபோல், மழை நின்றாலும் மரம் துளிர்க்கும் மழைத்துளிபோல், ஆதவன் மறைந்தத அறிய முடியாதபடி அந்தி இன்னும் வெறித்துக் கிடப்பதுபோல், மரம் மயங்கும்பட மலர் உதிர்த்துச் செல்லும் தென்றலை போல்,  உன் பிரிவும்  இருந்து இருக்கலாம், மீள்ந்தும் முடிக்க முடியாதொரு சொப்பனம் போல்.....

கண்ணாத்தா

பூக்குழி இறங்க சொல்கிறாய்! தீச்சட்டி எடுக்கச்சொல்கிறாய்! வேஷம் கட்டி ஆடவும்சொல்கிறாய்! நூறு முகமுடையாள்! ஆயிரம் கையுடையாள்! லட்சம் கண்ணுடையாள்! நீயும் கொஞ்சம் எங்களுக்காக நிலமிறங்கு, அநீதி கொளுத்து, வேஷம் களை, போதும் இந்த பாரபட்சம்!

பழக்கம்

கால்கள் பழையதெனினும் செருப்பு புதிதெனில், நடை பழக ஒரு நாளேனும் ஆகத்தான் செய்கிறது!

அதீத

அதீத காரம், அதீத இனிப்பு, அதீத கசப்பு, அதீத அன்பு, அதீத மகிழ்ச்சி , அதீத துயரம், அதீதங்களை அணுக மறுக்கிறது மனம். உப்பு சப்பில்லாதவாழ்க்கை ஒன்றும்அவ்வளவு பெரிய குற்றமில்லைதானோ.?..