ஊதுவர்த்தியொன்று
உணரமுடியாதபடி அணைவதுபோல்,
மழை நின்றாலும்
மரம் துளிர்க்கும்
மழைத்துளிபோல்,
ஆதவன் மறைந்தத
அறிய முடியாதபடி
அந்தி இன்னும்
வெறித்துக் கிடப்பதுபோல்,
மரம் மயங்கும்பட
மலர் உதிர்த்துச் செல்லும்
தென்றலை போல்,
உன் பிரிவும்
இருந்து இருக்கலாம்,
மீள்ந்தும் முடிக்க
முடியாதொரு சொப்பனம் போல்.....