சிவப்பு இதயங்கள்,
பச்சை இதயங்கள்,
ஏன்
ஊதா இதயங்களும் உண்டு!
வண்ண வண்ண பூக்கள் போல,
வண்ண வண்ண இதயங்கள்.
யாரேனும் அவற்றில்
அன்பின் வாசனை நுகர்ந்ததுண்டா?
உங்கள் பேனாக்களை மட்டுமே
உடைத்துள்ளோம்,
மற்றப்படி நீங்கள்
எழுதுவதற்கு தடையேதுமில்லை,
மறப்பது ஒரு வரம்
புதுச்சுவை
பழக மறுக்கும் நாக்கு,
மொழி புரியாமல்
பதில் மறுக்கும் அதரம்.
பொருந்தா சீருடை
பொறுக்காத உடல்,
மழையின் மண்வாசனை
நுகர மறுக்கும் நாசி.
இருப்பின் இயலாமை
இறையும் இதயம்.
பிழைப்பு தேடி
புலம் பெயர்ந்தவனின்
உடல்மொழி ஒன்றும்
அவ்வளவு புதிரானதில்லை.